கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான்.

முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் என்பவர் பாளைத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது தொகுதிக்கு என்று எந்த நன்மையும் செய்யாதவர்.

எம்.எல்.ஏ. என்ற முறையில் பொது மக்கள் தேவைக்கு என்று சென்றால் அவர்களிடத்திலே கைக் கூலி வாங்கி விட்டுத்தான் கையெழுத்துப் போடுவார்.

இவரின் பிற திருவிளையடல்கள்.

இவரின் பராமரிப்பில் இருந்த வக்பு நிலங்களில் ஒரே இடத்தை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்று காசு வாங்கிய கண்ணியவான்.

நிலப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் வந்து உரிமை கோரும்போது கட்டப் பஞ்சாயத்து பேசி இரண்டு தரப்பிலும் காசடித்த காசாளர்.

இதனால் எம்.எல்.ஏ.வாக இருந்தபொழுது முனிசல் சேர்மன் தேர்தலில் நின்று படு தோல்வி அடைந்தார்.

பிற கட்சிகளில் கவுன்ஸிலராக இருந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக ஆவதை கண்டிருக்கிறோம்.

1984இல் எம்.எல்.ஏ.வாக இருந்த முஸ்லிம் லீக்கைச் சார்ந்த இவர் 1998இல் கவுன்ஸலிராக ஆனார். என்னே முன்னேற்றம் பார்த்தீர்களா?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான் என்பதை மறுக்க முடியுமா?

இப்படி செல்லாக் காசாகி விட்ட இவர் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த மார்க்க பிரச்சனையை கையிலெடுத்து ஷய்த்தானின் ஏஜெண்டாக செயல்பட்டார்.

4 மத்ஹபுகளை பின்பற்றாதவர்கள், தொப்பி போடாதவர்கள், நெஞ்சில் கை கட்டுபவர்கள், விரலசைப்பவர்கள், கூட்டுத் துஆவில் கலந்து கொள்ளாதவர்கள் பள்ளிக்கு தொழ வரக் கூடாது என்று சட்டம் போட்டு தன்னை சட்டாம்பிள்ளை போல் காட்டிக் கொண்டார்.

இவர் போட்ட சட்டத்தை அமல்படுத்திய கடைப் பள்ளி, புதுமனைப் பள்ளிக்கு எதிராக நாம் கோர்ட்டுக்கு போனதும் அவர்களை அம்போ என விட்டு விட்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒளிந்து கொண்டார். எம்.எல்.ஏ.வாக இருந்து, முனிசல் சேர்மன் தேர்தலில் தோற்று, கடைசியில் கவுன்சிலராக ஆன முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம்.

இரண்டு பள்ளி ஜமாஅத் தலைவர்கள் மட்டுமன்றி மகான் பசீர் அப்பா தெரு ஜமாஅத்தார்களும் நம்மிடம் சமாதானம் பேசினார்கள். மாநில தலைவர் கமாலுத்தீன் மதனியிடம் மகான் பசீர் அப்பா தெரு ஜமாஅத்தார்கள் சென்று மன்னிப்புக் கேட்டதால் மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தோம்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் ஆகிவிட்ட முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த நபி வழியான இரண்டாம் ஜமாஅத் நடைபெறுவதை தடுக்க நவீன இப்லிஸாக இப்பொழுது அவதாரம் எடுத்து இருக்கிறார்.

நவாப் பள்ளியில் இது விஷயமாக இவரது விஷப்பல் பிடுங்கப்பட்டதை அறிந்திருந்தும் இந்த பித்னாவை வளர்த்து குளிர் காய நினைக்கிறார்.

இவரே செட்டப் கடிதங்களை தயார் செய்து அனுப்பி பிற பள்ளி லட்டர் பேடுகளில் பொய்யான குற்றச்சாட்டை எழுதி அனுப்பும்படி கேட்டிருக்கிறார். அவர் அனுப்பிய செட்டப் கடிதமும் அழைப்பிதலும் இதோ.
முதலாம் ஜமாஅத்தை விட்டு விட்டவர்கள்தான் இரண்டாம் ஜமாஅத் நடத்துவார்கள் இது நபி வழி. ஜமாஅத்தாக தொழுவோருக்கு தனித்து தொழுவோரை விட 27 மடங்கு நன்மைகள் அல்லாஹ்விடம் கிடைக்கும். மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை மண் அள்ளி வைக்க நினைக்கும் இந்த மாபாதகன் யார்? ஷய்தானாக அன்றி வேறு யாராக இருக்க முடியும்.
வட்டி, வரதட்சணை, மது, மாது, சூது போன்ற சமூக கொடுமைகள் செய்து கூத்தாடிக் கொண்டிருக்கும் கூட்டத்தின் தலைவர்தான் இவர். இஸ்லாத்திற்கெதிராக அரசு அதிகாரிகளைக் கொண்டு சட்டம் போட துடிப்பவர்கள் ராமகோபாலன் வகையறாக்களே.
நபி வழியாம் கூட்டுத் தொழுகைக்கு வேட்டு வைக்க அரசு அதிகாரிகளின் உதவியை நாடும் இந்த ஈனப் பிறவியை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அல்லாவுக்காக சட்டப்படி அதனை எதிர் கொள்ள என்றும் தயார். அல்லாஹ் நன்மைக்கு நல்லுதவி புரிவான்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.