இந்திய தூதரக செயல்பாடுகளும் பாதிப்புகளும்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 07-09-2006
அனுப்பு:-
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி,
தபால் பெட்டி எண்:- 19661, துபை, யு.ஏ.இ.
fazlulilahi@gmail.com,mdfazlulilahi@hotmail.com



தாயக முகவரி:-
55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு
மேலப்பாளையம், நெல்லை, 627005.

பெருநர்:-
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.
தலைவர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
சென்னை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

விஸா இல்லாதவர்கள், விஸா இருந்தும் சட்ட விரோதமாக வெளியில் வேலை செய்பவர்கள், பாஸ்போர்ட்டே இல்லாதவர்கள். இமிகிரேஷன் கோர்ட் மூலம் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரை சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை பிடித்து இமிகிரேஷன் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக லேபர்(களை பிடிக்கும்) ஆபீஸர்கள். லேபர் சட்ட குற்றவாளிகளுக்காக அவுட் ஜெயில் என்ற தனிச் சிறை என்றெல்லாம் இருந்தது. Nஷக் செய்யத் மறைவுக்குப் பிறகு அவரது மறுமை நன்மைக்காக இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டது. லேபர்களை பிடித்தல் நிறுத்தப்பட்டது. அவுட் ஜெயில் என்ற தனிச்சிறை ஒழிக்கப்பட்டது. சட்ட விரோதமாக உள்ள லேபர்கள், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் தாங்களாக முன் வந்தால் மற்ற குற்றங்கள் இருந்தால் தவிர சிறையின்றி அனுப்புவது என்ற நடைமுறை இருந்து வருகிறது.

பணியாளர்களாக வருபவர்களின் பாஸ்போர்ட்டை விஸா கொடுத்த ஸ்பான்சர்களோ கம்பெனியினரோ வாங்கி வைத்துக் கொள்வார்கள். தங்களை விட்டு சட்ட விரோதமாக வெளியில் வேலைக்குச் சென்று விட்டால் பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டார்கள். பணப் பேரம் செய்வார்கள். இன்று நாளை என அலைய விடுவார்கள். அந்த நிலை மாற்றப்பட்டு இமிகிரேஷனில் ஒப்படைத்து விட சட்டம் வந்து விட்டது. எனவே இப்பொழுது எல்லாருமே இமிகிரேஷனில் ஒப்படைத்து விடுகிறார்கள். எனவே சட்ட விரோதமாக வெளியில் வேலைக்குச் சென்று விட்டவர்கள் தாயகம் திரும்ப எண்ணினால் மனு டைப் செய்து இமிகிரேஷனுக்குத்தான் செல்ல வேண்டும். இது சம்பந்தமாக மனு டைப் செய்ய சரியானவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள இமிகிரேஷன் டைப்ரைட்டர்களே. அவர்கள் முறையாக டைப் செய்வதோடு எந்த எந்த கவுண்டர்களுக்கு செல்ல வேண்டும் என்ற விபரமும் சொல்லி வழி காட்டுவார்கள்.

இமிகிரேஷனில் பாஸ்போர்ட் இருந்தாலும் உடனே தர மாட்டார்கள். மனுவை வாங்கிக் கொண்டு போலீஸ், மற்றும் சி.ஐ.டி. சர்ட்பிகேட் கேட்டு அனுப்புவார்கள். தேவைப்பட்டால் கை ரேகைகளும் எடுப்பார்கள். வெளியில் வேலைக்குச் சென்ற லேபர் சட்ட குற்றம் தவிர வேறு எதுவும் இல்லை என்றால் பாஸ்போர்ட்டை தந்து விடுவார்கள். ஓபன் டிகட் எடுத்து வரச் சொல்வார்கள். பாஸ்போர்ட் இல்லை என்றால் போலீஸ், மற்றும் சி.ஐ.டி. என்.ஓ.ஸி. கிடைத்த பின் அவுட் பாஸ் வழங்குமாறு தூதரகத்துக்கு பரிந்துரை கடிதம் கொடுப்பார்கள். இமிகிரேஷனின் பரிந்துரை கடிதம் பெற்றுத்தான் தூதரகங்கள் மக்களால் அவுட் பாஸ் எனப்படும் எமர்ஜென்ஸி சர்ட்பிகேட் வழங்க வேண்டும். அவுட் பாய் கிடைத்த பின் ஓபன் டிகட்டுடன் இமிகிரேஷன் செல்ல வேண்டும். அவர்கள் ஒரு தேதியில் டிகட் ஓ.கே. செய்து போகச் சொல்வார்கள். இது விதி முறைகளுக்குட்பட்ட நடை முறை.

இந்த விபரங்களை தெரியாத பாமரர்களான இந்தியர்கள் இமிகிரேஷனுக்குச் செல்லாமல் நேராக தூதரகத்தில் முறையிடுகிறார்கள். இந்தியர்களுக்கு வழி காட்ட வேண்டிய தூதரகமோ விதி முறைகளுக்குட்பட்ட நடை முறைகளை விளக்குவதில்லை. மனுவை வாங்கி விட்டு அவுட் பாஸ் கொடுப்பது மட்டுமே தங்கள் கடமை என அவுட் பாஸ் கொடுத்து விடுகிறார்கள். அப்பாவி லேபர்களோ அவுட் பாஸ் கிடைத்த மகிழ்ச்சியில் டிகட் எடுத்து ஏர்போர்ட் சென்று போர்டிங் பாஸ் வாங்கி இமிகிரேஷன் வரை சென்று திரும்புகிறார்கள். அவர்கள் குடும்பத்தாரோ தாயக ஏர்போர்ட் சென்று காத்து கிடந்து ஏமாறுகிறார்கள். இப்படி பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். அந்த வரிசையில் பாதிக்கப்பட்டுள்ளவர்தான் மேலப்பாளையம் ஜாபர் அலி என்பவர். அவர் தனது நிலையை விளக்கி இந்திய தூதரகத்தில் மனு கொடுத்துள்ளார்.

To 01-08-2006

The consular
The Consulate Dubai

Dear Sir,

Sub: Requisition for Out pass to go to India

I came to Sharjah on April 28th of 2005. When I joined duty next day, I was really disappointed with my position and salary, which was entirely different from what my agent said. The work was laborious and I couldn’t withstand the hardship of my work. I told my sponsor about my condition. But his reply was either you work here or go to your country.
I nearly spent One Lakh Indian Rupees for my visa. I at least needed to make that much of before going to India. Some I had no option except decamping. Now my health is down even though I am not successful in earning One Lakh. So, now I want to go to India. My passport is with my sponsor, whose address is below.

United Modern Company,
Electrical Industries LLC
Phone No. 06 – 5338234
Fax No. 06 – 5338235

As I fear to meet my sponsor directly, I come to you sir, hoping you will surely help me.
Kindly do the needful to facilitate my departure.

Thanking you


SARIK HANIFA JAFAR ALI
Passport No : E1846199
Mobile No 050- 7476544

இந்த மனுவை பெற்ற இந்திய தூதரகம் 29-08-2006 அன்று அவுட் பாஸ் வழங்கி உள்ளது. அதைப் பெற்ற ஜாபர் டிகட் ஓ. கே. செய்து விட்டு வரவேற்க குடும்பத்தார்களை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லி விட்டு அவரும் ஷhர்ஜா ஏர்போர்ட் சென்று விட்டார். சாமான்களை எடை போடும் கவுண்டரில் கொடுத்து விட்டு விமானப் பயண போர்டிங் பாஸும் வாங்கி விட்டார். வழியனுப்ப வந்தவர்களிடம் டா டா காட்டி விட்டார். வழியனுப்ப வந்தவர்களும் துபை திரும்பி விட்டனர். ஷhர்ஜா ஏர்போர்ட் இமிகிரேஷனில் இமிகிரேஷன் கிளீரன்ஸ் பேப்பர் கேட்டுள்ளனர். வேறு வழியின்றி திரும்பி விடுகிறார்.

மறுநாள் இமிகிரேஷன் போய் கிளீரன்ஸ் பேப்பர் கேட்டிருக்கின்றார். அவுட் பாஸ் எப்படி கிடைத்தது போலீஸின் என்.ஓ.ஸி. கொண்டு வா என்று இமிகிரேஷனில் கூறி இருக்கின்றனர். போலீஸுக்கு போய் இருக்கிறார். இமிகிரேஷன் லட்டர் கொண்டு வா என்று கூறி இருக்கின்றனர். இமிகிரேஷன் போய் லட்டர் கேட்டிருக்கிறார். அவுட் பாஸ் கிடைத்தவர்களுக்கு போலீஸ் என்.ஓ.ஸி. கேட்டு நாங்கள் லட்டர் கொடுக்க முடியாது. போலீஸ் என்.ஓ.ஸி. கிடைத்த பின்தான் நாங்கள் அவுட் பாஸுக்கு பரிந்துரை கடிதம் தருவோம். எங்கள் பரிந்துரை இல்லாமல் அவுட் பாஸ் கிடைத்தவர்களுக்கு நாங்கள் போலீஸ் என்.ஓ.ஸி.க்கு லட்டர் தர மாட்டோம் என்று கூறி இருக்கின்றனர்.

இந்த பிரச்சனையை இந்திய தூதரகம் சென்று ஜாபர் அலி கூறி இருக்கிறார். இந்திய தூதரகத்தினரோ அவுட் பாஸ் தருவதுடன் எங்கள் வேலை முடிந்து விட்டது என்று கூறியிருக்கின்றனர். எனவே கண்கலங்கிய நிலையில் தான் தயாகம் செல்ல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலம் உதவி செய்யுமாறு வேண்டி நம்மிடம் வந்தார். எனவே முழு விபரங்களையும் தங்களுக்கு எழுதியுள்ளேன்.

இந்திய தூதரகங்களின் குறைநிறைகளை சுட்டிக் காட்ட என ஒவ்வொரு மாதமும் கடைசி புதன் கிழமை மாலையில் இந்திய தூதரகங்களில் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டங்களில் லேபர்களான ஜாபர் அலி மாதிரியான அடிமட்ட மக்களின் குறைநிறைகள் பாதிப்புகள் பற்றி பேசப்படுவதே இல்லை. காரணம் அந்த கூட்டங்களில் பாமர மக்களுடன் தொடர்பு இல்லாத ஸ்டார் ஹோட்டல்களில் நிகழ்ச்சி நடத்தும் இந்திய அமைப்பினர்தான் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மட்டும்தான் கலந்து கொள்கிறார்கள்.

வார வாரம் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு லேபர்களான அடிமட்ட மக்களுடன் தொடர்புடன் இருக்கக் கூடிய துபை மு.மு.க.வுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. இதனால்தான் லேபர்களான பாமரர்களின் பாதிப்பு இந்திய தூதரகங்களுக்குத் தெரிவதில்லை. இதையும் உங்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைக்கு வழி வகுக்க வேண்டுகிறேன்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
துபை

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.