இரு வேடமா? இரட்டை வேடமா? பி.ஜே.க்கு கத்தர் போட்ட தடை சாதராணமானது அல்ல.

                    பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்                  24-06-2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவன் நான் என்று தன்னைப் பற்றி தானே விளம்பரம் செய்து வந்த பி.ஜே. அவருக்கே உரிய சதி திட்டத்தின் மூலம் த.த.ஜ.வின் தலைவர் பதவியை கைப்பற்றி விட்டார். 

பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார் என்பதெல்லாம் பி.ஜே. காட்டும் கண் கட்டி வித்தைகளில் ஒன்று. இதை அறிவுள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். பி.ஜே. தானே ஆட்களை செட்டப் செய்து பொதுக் குழுவுக்குள் வரச் செய்வார் என்பது பி.ஜே.யே ஒப்புக் கொண்டுள்ள வரலாற்று உண்மை. 

தனது தேவை நிறைவேறும் வரை தலைவராக வைத்திருந்தவரை தக்க தருணத்தில் தலைவர் பதவியிலிருந்து தூக்கி வீசி விட்டார்.  இன்னும் அவர் இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே துணைத் தலைவராகவும்  ஆக்கி வைத்துள்ளார். 

பொதுவாக துணைப் பொறுப்புகளிலிருந்து மேல் பொறுப்புகளுக்குத்தான் தேர்வு செய்யப்படுவார்கள். தலைவராக இருந்து துணைத் தலைவராக ஆன முதல் மனிதராக உலகில் ததஜகாரர்தான் இருப்பார். 

கிளைத் தலைவர்கள் கூட வட்டம், நகரம், மாநகரம், மாவட்டம் என்று மேல் நோக்கித்தான் செல்வார்கள். எந்தக் கிளைத் தலைவரும் துணைத் தலைவராக கீழிறக்கப்பட்டு கேவலப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார். 

ஏனென்றால் அவர்களுக்கு மானம் இருக்கும். ததஜ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம். பழைய மாதிரியிலேயே அதே மாதிரி குற்றச்சாட்டு உருவாக்கினார். முழுமையாக நீக்க இருந்தார். இருந்தாலும் தற்காலிகமாக பதவி இறக்கம் மட்டும் செய்துள்ளார் என்று பி.ஜே. தரப்பு கூறுகிறது. இதில் மறைந்துள்ள உண்மைகள் வெடிக்கும்போது வெளி வரட்டும் என விட்டு விடுவோம்.

கிராமவாசிகளுக்குப் புரிவது கூட த.த.ஜ.வினருக்குப் புரிவதில்லை.

பல்வேறு செயலாளர்களுக்கு மத்தியில் பொதுவாக உள்ள (பொறுப்புக்கு)செயலாளருக்குப் பெயர்தான் பொதுச் செயலாளர் (ஜெனரல் செகரட்டரி) என்பது. அந்த பெயரிலேயே அர்த்தம் இருந்தும் அர்த்தமற்ற முறையில் 2 பொதுச் செயலாளர்கள் என அறிவித்து கூத்தடித்தார். 

பதவிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளில் கூட துணை பொதுச் செயலாளருக்கு கூடுதல் பொறுப்போ கவுரமோ கொடுத்தாக வேண்டும் என்றால் இணைப் பொதுச் செயலாளர் என்றுதான் பொறுப்பு கொடுப்பார்கள். 

அவர்கள் கூட 2 பொதுச் செயலாளர்கள் போட்டு கூத்தடிக்க மாட்டார்கள். முதல்வர், பிரதமர் இவற்றில் அடுத்த நிலையில் உள்ளவருக்கு துணை முதல்வர், துணைப் பிரதமர் என்றுதான் பொறுப்பு கொடுப்பார்கள். 

இன்னும் கூடுதல் கவுரவம் கொடுக்கப்பட வேண்டும் என்றால் இணை முதல்வர், இணைப் பிரதமர் என்றுதான் பொறுப்பு கொடுப்பார்கள். 2 முதல்வர். 2 பிரதமர் என்று பொறுப்பு கொடுத்தால் அதை கோமாளித்தனமானது என்று கிராமவாசியும் சொல்லி விடுவான். 

அது மாதிரி கோமாளித்தனமானதுதான் 2 பொதுச் செயலாளர்கள் முறை. கிராமவாசிகளுக்குப் புரிவது கூட த.த.ஜ.வினருக்குப் புரிவதில்லை. அதனால்தான் இப்படி தைரியமாக கூத்தடிக்கிறார் பி.ஜே.

அலாவுதீனை  துணைப் பொதுச் செயலாளராக பதவி இறக்கம் செய்து விட்டார் பி.ஜே.

பதவிகளை கொடுத்துதான் ஆள் பிடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்ததால் 2 பேருமே பொதுச் செயலாளர்கள் என்றார் பி.ஜே. அதனால் நம்பர் 1 யார்? நம்பர் 2 யார்? என்று பாக்கருக்கும் அலாவுதீனுக்கும் ஜடை பிடி சண்டை நடந்து வந்தது. 

அலாவுதீனை துபைக்கு கூட்டிப் போனால் பாக்கரை இலங்கைக்கு கூட்டிப் போக வேண்டும் இப்படியான நிலை. எனவே உலகத்தில் இல்லாத அறிவுக்கு ஒவ்வாத 2 பொதுச் செயலாளர் முறைக்கு தீர்வு காண முடிவு செய்தார். 

பாக்கருக்கு விண். டி.வி.யில் சி.இ.ஓ. பொறுப்பு அலாவுதீனுக்கு த.த.ஜ.வில் பொதுச் செயலாளர் பொறுப்பு என்று பேசி சமாதானம்  செய்து வைத்திருந்தார். அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. 

பொதுச் செயலாளராக பாக்கரை ஆக்கி விட்டு ஏ.எஸ். அலாவுதீனை  துணைப் பொதுச் செயலாளராக பதவி இறக்கம் செய்து விட்டார். ரகசிய கூலிகளை சேர்த்து கொடுப்பதில் வல்லவரும் பி.ஜே.யின் விருப்பப்படியெல்லாம் கள்ளக் கணக்கு எழுதக் கூடியவருமான அன்வர் பாஷாவை வழக்கம்போல் பொருளாளராக ஆக்கிக் கொண்டார். 

பி.ஜே.யின் இரட்டை வேடங்களை நியாயவான்கள் புரிந்தே வைத்துள்ளார்கள்.
இந்த பொதுக்குழுவை பிரபலப்படுத்தவும் இன்னும் சில இலாப நோக்குடனும் சில ஸ்டண்ட்டுகள் அடித்துள்ளார். அதில் ஒன்றுதான், எட்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம். 

கோவை சிறைவாசிகள் குண்டு வெடிப்புக்கு மூல காரணம் பி.ஜே.யாகிய நான்தான் என்று சொன்னார்கள். எனவே அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்காத வரை அவர்களுக்காக குரல் கொடுக்க மாட்டேன் என்று எழுதியும் பேசியும் வந்தவர் பி.ஜே. 

சிறைவாசிகளுக்காக த.மு.மு.க குரல் கொடுப்பதற்கு தடையாக இருந்து வந்தவரும் பி.ஜே.தான். அந்த பி.ஜே. அடித்துள்ள இந்த அந்தர் பல்டியை கிராமவாசிகளைவிட மோசமானவர்கள் புரியாமல் போகலாம். பி.ஜே.யின் இரட்டை வேடங்களை நியாயவான்கள் புரிந்தே வைத்துள்ளார்கள். 

பி.ஜே.தான் சிறைவாசிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்காக அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முயற்சியை மில்லி கவுன்ஸில் ஓராண்டுக்கு முன் மேற்கொண்டது. அதற்கு மு.லீக், த.மு.மு.க, ஜமாஅத்துல் உலமா, ஜமாஅத்தே இஸ்லாமி, ஜாக், சுன்னத் ஜமாஅத் என எல்லா அமைப்புகளும் ஒத்து வந்தன. 

பி.ஜேயின் த.த.ஜ. மட்டும் சிறைவாசிகள் பி.ஜே.யிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் தர வேண்டும் இல்லாவிட்டால் ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று கூறி விட்டார்கள். சிறைவாசிகளும் பி.ஜே.யிடம் நாங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் நாங்கள் சிறை செல்ல மூல காரணமே பி.ஜே.தானே. எனவே பி.ஜே.தான் சிறைவாசிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி விட்டார்கள். 

விடுதலை செய் என்ற புதிய வேடத்தில் பி.ஜே.  

இதற்குப் பிறகு சும்மா இருந்தார்களா த.த.ஜவினர். தங்களை காத்துக் கொள்ள கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக ஆகி விட்ட பி.ஜே.யும் அலாவுதீனும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு எதிராக சாட்சியும் சொன்னார்கள். 

சாட்சி சொல்ல வந்த பெரும்பாலான இந்து சகோதரர்கள், தங்களுக்கு சரியாக நினைவு இல்லை என்ற உண்மையை கூறி விட்டனர். கோவை சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த அதிகாரிகள் கூட சம்பவம் நடந்தது உண்மை.  வருடங்கள் ஆகி விட்டன. எனவே  யார் என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை என்று கூறி விட்டார்கள். 

ஆனால் பி.ஜே.யும் அலாவுதீனும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு எதிராக திட்டமாக உறுதியான முறையில் சாட்சி கூறி விட்டார்கள். இவர்கள் சாட்சி கூறியதும் போலீஸ் அதிகாரிகளெல்லாம் பி.ஜே.யிடம் கை குலுக்கி நன்றி கூறி போலீஸ் பட்டாளம் புடை சூழ வழி அனுப்பி வைத்தார்கள். 

இந்த பி.ஜே.தான் இப்பொழுது விடுதலை செய் என்ற புதிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்குப் பெயர் இரு வேடமா? இரட்டை வேடமா? அ.தி.மு.க. சின்னத்தை இரட்டை இலை என  சொல்லக் கூடாது இரு இலை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற ஆய்வை எழுதிய தமிழ் பண்டிதர் பி.ஜே.யே முடிவு செய்து கொள்ளட்டும்.

பி.ஜே. போடும் நாடகமாகவோ சதி திட்டமாகவோதான் இருக்கும்.

இந்த புதிய வேடம் போடக் காரணம், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மூல காரணமான பி.ஜே.யின் சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டு விட்டது. சிறைவாசிகள் விடுதலைக்காக த.மு.மு.க, போராட்டங்களை அறிவித்து விட்டது. மு.லீக் இளைஞர் அணியும் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அதனால் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்ற நல்ல சூழல் உருவாகி விட்டது. 

இதைப் பயன்படுத்தி தன்னால்தான் விடுதலையான மாதிரி காட்டுவதற்காகவும் ஒரு நாடகம் போட்டார் பி.ஜே. சிறைவாசிகளின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்கப் போகிறேன் எனவே சிறைவாசிகள் லிஸ்ட்டைத் தாருங்கள் என்று சிறைவாசிகள் குடும்பத்தவர்கள் அமைப்புகளில் ஒன்றான கோவை சி.டி.எம். ஐ தொடர்பு கொண்டார். 

பி.ஜே.யின் சார்பாக கோவை ஜாபர், அப்துர்றஹீம் அரிசிகடை ரபீக் என ஒவ்வொருவராக அணுகினர். இது பி.ஜே. போடும் நாடகமாகவோ சதி திட்டமாகவோதான் இருக்கும் என்று விளங்கி உள்ள சி.டி.எம்.யினர் நீங்கள்தானே கூண்டில் ஏறி சாட்சி சொன்னீர்கள். சிறையில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமலா சாட்சி சொன்னீர்கள்? நாங்கள் லிஸ்ட் தர மாட்டோம். என கூறி விட்டனர். 

காலம் காலமாக சிறையில் கிடந்தாலும் எங்களை இந்த கதிக்கு ஆளாக்கிய சமுதாய துரோகி பி.ஜே. மூலமாகத்தான் விடுதலை என்று வருமானால் அந்த விடுதலை எங்களுக்குத் தேவை இல்லை என்று சிறைவாசிகளும் கூறி விட்டார்கள்.

சினிமா நடிகரும் பி.ஜே.யின் நெருங்கிய நண்பருமான டி. ராஜேந்தர்.

சிறைவாசிகள் குடும்பத்தவர்கள் அமைப்புகளில் ஒன்றான சி.டி.எம். சார்பாக தமிழக முதல்வரை சந்திக்கும் முயற்சி கடந்த மாதமும் நடந்தது. அனைத்து அமைப்புகளும் சேர்ந்து சந்தித்தால் நல்லதாக இருக்கும் என்பதால் மீண்டும் அனைத்து அமைப்புகளையும் கூட்டும் பணியை மில்லி கவுன்ஸில் செய்தது. 

10-06-2005 வெள்ளியன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் மு.லீக், த.மு.மு.க, ஜமாஅத்துல் உலமா, ஜமாஅத்தே இஸ்லாமி, ஜாக், என எல்லா அமைப்புகளும் கலந்து கொண்டன. 

பி.ஜே. அணியான த.த.ஜ. மட்டும் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி புறக்கணித்து விட்டது. அன்றைய தினம் சினிமா நடிகரும் பி.ஜே.யின் நெருங்கிய நண்பருமான விஜய டி. ராஜேந்தரை ஜும்ஆ மேடையில் ஏற்றி அழகு பார்த்தது த.த.ஜ. கோரிக்கை ஒன்றாக இருக்கும்போது அதை எல்லாரும் சேர்ந்து வைத்தால் வலுவாக இருக்குமே என்றுதான் அனைத்து அமைப்புகளையும் மில்லி கவுன்ஸில் கூட்டியது. 

இங்குதான் பி.ஜே.யின் சுய ரூபம் மறைந்து நிற்கிறது.

ஓற்றுமையை விரும்பாத பிரிவினைவாதி பி.ஜே. நாங்கள் தனியாகத்தான் குரல் கொடுப்போம் என்று கூறி விட்டார். தனியாகக் குரல் கொடுத்தாலும் அணியாக சேரக் கூடாதா? த.மு.மு.க. சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒற்றைக் கோரிக்கை மாநாடு நடத்தியது. கெடு வைத்து போராட்டம் அறிவித்துள்ளது. இதுபோல் மு.லீக் இளைஞர் அணியும் குரல் கொடுத்து வருகிறது. இப்படித் தனியாகப் போராடி வந்தாலும் அணியாக வாருங்கள் என்ற அழைப்பையும் ஏற்று கலந்து கொண்டார்கள். த.த.ஜ. மட்டும் தயங்குவது ஏன்? இங்குதான் பி.ஜே.யின் சுய ரூபம் மறைந்து நிற்கிறது.

அனைவரின் முன்பாக பி.ஜே. அணியின் சாயம் வெளுத்து விடும்.

சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி எல்லோரும் போகும்போது பி.ஜே.யும் சேர்ந்து போனால் அதிகாரிகள் கேட்பார்கள். என்ன பி.ஜே. சார் நீங்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள்தானே வாக்கு மூலம் தந்தீர்கள். நீங்கள்தானே கூண்டில் ஏறி குற்றவாளிகள் என்று சாட்சி சொன்னீர்கள் அவர்கள் விடுதலையானால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று வேறு சொன்னீர்களே. இப்பொழுது விடுதலை செய்யணும் என்ற கூட்டத்துடன் வந்திருக்கிறீர்களே|| என்று கேட்பார்கள். 

அனைவரின் முன்பாக பி.ஜே. அணியின் சாயம் வெளுத்து விடும். எனவேதான் மற்றவர்களுடன் வர பயந்து தனியாக மட்டும் குரல் கொடுப்போம் என்கிறார் இரட்டை வேடக்காரர் பி.ஜே. 

த.த.ஜ. தனியாகப் போனால் என்ன நடக்கும். மேற்கண்ட கேள்வியை அதிகாரிகள் கேட்பார்கள். பி.ஜே. மட்டும் தனியாக உள்ளதால், எல்லாம் ஒரு நாடகம்தான். இப்படி நாடகம் போட்டால்தானே மக்களை ஏமாற்ற முடியும். எனவே எங்கள் கோரிக்கை என்பது வெறும் வெளி வேஷம்தான். தயவு செய்து அவர்களை வெளியே விட்டு விடாதீர்கள் என்று பி.ஜே. கூறி விடுவார். 

பி.ஜே. தனியாகப் போனால் மட்டும்தான் இந்த இரட்டை வேடம் போட முடியும். மற்ற அணிகளுடன் சேர்ந்து போனால் இந்த இரட்டை வேடம் போட முடியாது. இதுதான் உண்மை.

பி.ஜே.தான் காரணம் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டது.

அதாவது பி.ஜே, விடுதலை செய் என வெளியில் குரல் கொடுத்தால் விடுதலை செய்யாதே என்பதுதான் அர்த்தம் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்த கொள்வார்கள். பி.ஜே.யின் த.த.ஜ. கெடுதல் முயற்சிகளையும் முறியடித்து த.மு.மு.க, மு.லீக். மற்றுமுள்ள அமைப்புகளின் முயற்சியால் விடுதலை யாகி விட்டாலும் த.த.ஜ. முயற்சியால்தான் விடுதலை என்றும் மக்களை ஏமாற்றுவார்கள். 

அதற்காகத்தான் விடுதலை செய் என்ற பகிரங்க அறிக்கை போன்ற நாடகங்கள். இதில் இன்னொரு உண்மை வெளிப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகளுக்கு பி.ஜே.தான் காரணம் என்று கோவை சிறைவாசிகள் சொல்லி உள்ளார்கள். 

அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்காத நிலையில் அவர்களின் விடுதலைக்கு பி.ஜே. அணி குரல் கொடுத்தால் அந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக ஆகி விடும் என்றும் பி.ஜே.யும் பி.ஜே. தரப்பினரும் கூறி வந்தார்கள். இப்பொழுது கோவை சிறைவாசிகள் பி.ஜே.யிடம் மன்னிப்பு கேட்காத நிலையில்தான் அவர்களுக்காக பி.ஜே. அணி குரல் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

எனவே இந்த அறிக்கை மூலம் குண்டு வெடிப்புகளுக்கு பி.ஜே.தான் காரணம் என்ற கோவை சிறைவாசிகளின் குற்றச்சாட்டை த.த.ஜ. ஒப்புக் கொண்டு விட்டது. அதாவது குண்டு வெடிப்புகளுக்கு பி.ஜே.தான் காரணம் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டது. காலம் தாழ்ந்தேனும் உண்மை அவர்கள் செயல் மூலமே வெளி வந்த விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தோஹா கத்தரும் அவுட்டா?

வெளிநாட்டுப் பயணங்களில் ஏற்படும் அதிர்ச்சி தோழ்விகளால் எடுக்கப்பட்ட முடிவா? என்ற ஒரு வாசகம் முந்தைய வெளியீட்டில் இடம் பெற்றிருந்தது. இதைப் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.யின் தோஹா கத்தர் பயணம் தோழ்வி என்பதைத்தான் அந்த வாசகம் கூறுகிறது என்று விளங்கி விட்டார்கள். 

எனவே முந்தைய வெளியீட்டை பார்த்ததும் போன் போட்ட சகோதரர்களெல்லாம் தோஹா கத்தரும் அவுட்டா? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பி.ஜே. அவர்கள் தனது கத்தர் பயணத்தை கடைசி வரை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் அபகரித்து நடத்தி வரும் பத்திரிக்கையில் கூட இறுதி கட்டத்தில்தான் விளம்பரம் போட்டார். அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருந்தார். 

கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.

கத்தரில் உள்ள அவரது சகாக்கள் பி.ஜே. வழியிலேயே வார்த்தை மோசடிகள் செய்து விஸா எடுத்து விட்டனர். எப்படியோ விஸா எடுத்து விட்டோம். எனவே அதே மோசடி வழியில் நிகழ்ச்சிகளையும் நடத்தி விடுவோம் என்ற தெம்பில் பிறரை மதிக்காமல் அல்லாஹ்வை மறந்து ஆட்டம் போட்டனர். 

கத்தர் கூட்டம் முடிந்து துபை போய் தடை செய்யப்பட்ட அதே கிரசண்ட் வளாகத்தில் பேசுகிறார். அதை முடித்து விட்டு வி.ஐ.பி. விஸாவில் இலங்கை போய் நிறுத்தப்பட்ட இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியையும் அதே இடத்தில் நடத்துகிறார். 

பிறகு சந்திரிகாவை சந்தித்துப் பேசி விட்டு அங்கிருந்து இலங்கை அரசு மரியாதையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறார் என்றெல்லாம் தோஹா கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர்.

பி.ஜே. கனவு கண்டு கொண்டிருந்தார்.

அமானித மோசடியாளர். பி.ஜே.  அபகரித்துள்ள பத்திரிக்கையில் விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலேயே பி.ஜே.தோஹா கத்தருக்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டு விட்டது. ஐம்பத்தைந் தாயிரம் ரூபாய் வாடகை கட்டிடத்தில் குளு குளு ஏ.ஸி வசதியுடன் கூடிய கூட்டத்தில் இருக்கும்போதே இந்த சூடான செய்தி பி.ஜே.க்குப் போய் சேர்ந்து விட்டது. 

குளு குளு ஏ.ஸி வசதியுடன் கூடிய சென்னை விஜய் ஸ்ரீ மஹாலில்  இருந்த போதிலும் இந்த சூடானச் செய்தியால் சூடாகி சோர்ந்து போய் மூடு அவுட்டாகி விட்டார் பி.ஜே. எனவே அந்த பொதுக்குழுவில் அறிவிக்க இருந்த த.த.ஜ. சார்பில் தேர்தலில் போட்டி இடுவதற்கென தனி அரசியல் கட்சி என்ற திட்டத்தை போஸ்ட் மார்டம் செய்து விட்டார். 

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பி.ஜே. இந்திய அதிகாரிகளின் விசாரணைக்குள்ளானார். போகிற நாடுகளிலெல்லாம் பிரச்சனைக்குள்ளாகி வருகிறீர்களே என்று விசாரிக்கப்பட்டார். எனவே கத்தர் பயணம் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம் என்று பி.ஜே. கனவு கண்டு கொண்டிருந்தார். 

அதனால் சாதாரணமான விஸிட் விஸாவாக எடுத்து விடாமல் சட்டப்பூர்வமாக அவ்காப் அனுமதியுடன் கூடிய விஸா எடுக்கக் கூறி இருந்தார். பி.ஜே.யின் கத்தர் பயணக் கனவை என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும் அவருடன் உள்ள மவுலவிகளும் ரகசிய கூலிகள்தானே. அந்த மவுலவிகள் மூலம் பி.ஜே.யின் கத்தர் பயணச் செய்தி வெளியாகியாகமலா இருக்கும். வெளியாகி விட்டது.

பி.ஜே.யிடமிருந்து மன்னிப்புக் கடிதம் வராவிட்டால் அனுமதி தர மாட்டோம்.

செய்தி வெளியான வேகத்தில் கத்தரிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற அறிஞர் யூசுப் கர்ளாவி அவர்களை லூசு என்று இழிவுபடுத்திப் பேசியவர் பி.ஜே. என்ற விபரம் கத்தர் அவ்காபுக்குப் போய் சேர்ந்து விட்டது. பி.ஜே.யின் கத்தர் வருகைக்கு அவ்காப் பெர்மிஷன் பெற கத்தர் டி.என்.டி.ஜே.யினர் சென்றுள்ளார்கள். 

எங்கள் நாட்டிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற பேரறிஞர் யூசுப் கர்ளாவி அவர்களை இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார் இந்த ஜைனுல் ஆபிதீன். அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு ஜைனுல் ஆபிதீனிடமிருந்து கடிதம் வர வேண்டும் என்று கத்தர் அவ்காபில் கூறி விட்டனர். 

கத்தர் டி.என்.டி.ஜே.யினரோ பி.ஜே. அப்படி பேசவே இல்லை என பொய் சாட்சி சொல்லிப் பார்த்தார்கள். பி.ஜே.யின் இந்தப் பேச்சு பற்றி தகவல் கொத்தடுத்தவர் மீது கத்தர் அவ்காபுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்துள்ளது. அதனால் பி.ஜே. அவ்வாறு பேசியுள்ளது உண்மைதான் என்று உறுதியாகக் கூறியதுடன், ஜைனுல் ஆபிதீனிடமிருந்து மன்னிப்புக் கடிதம் வராவிட்டால் அனுமதி தர மாட்டோம் என்று கூறி விட்டனர். குறுக்கு வழியில் பிழைப்பு தேடுவதில் வல்லவர்களான டி.என்.டி.ஜே.யினர் இதாரத்துத்; தஃவா வல் இர்ஷாத்தில் போய் பெர்மிஷன் சீல் வாங்கி விஸா எடுக்க முடிவு செய்து அங்கு சென்றனர்.

கத்தர் டி.என்.டி.ஜே.யினரின் அதிரடிப் பொய்.

அவர்களோ, Q.C.P.I.  (கத்தர் கமிட்டி .பார் பிரசென்டேஷன் ஆஃப் இஸ்லாம்) பரிந்துரை செய்தால்தான் நாங்கள் பெர்மிஷன் தருவோம் என்று கூறி விட்டனர். Q.C.P.I. . முதீர் சொல்லித்தான் நாங்கள் இங்கு வந்தோம் என கத்தர் டி.என்.டி.ஜே.யினர் அதிரடிப் பொய் சொல்லி உள்ளனர். 

Q.C.P.I. முதீர் சொல்லி வந்துள்ளதாகச் சொன்னதும் இதாரத்துல் தஃவா இர்ஷாத்தின் பெர்மிஷன் சீல் அடித்து கொடுத்து விட்டனர். அவ்காப் அனுமதியின்றி, Q.C.P.I.  பரிந்துரையின்றி சூழ்ச்சிகளால் அதிரடிப் பொய்யால் விஸா எடுத்து விட்ட மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர்.

கத்தர் டி.என்.டி.ஜே.யினர். பி.ஜே. அபகரித்துள்ள பத்திரிக்கையில் பிரம்மாண்டமான விளம்பரம் வந்தது. விளம்பரத்தைப் பார்த்த சமுதாய நல விரும்பிகள் கத்தரிலுள்ள மிக முக்கியமான உயர் அதிகாரிக்கு பி.ஜே. யார் எப்படிப்பட்டவர் என்பதற்குரிய சகல ஆதாரங்களையும் பேக்ஸ் பண்ணினர். 

தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜே.தான் என்பதை அறிந்த உடனேயே  அந்த அதிகாரி பி.ஜே. கத்தருக்குள்ளேயே நுழையக் கூடாது என்ற தடை உத்தரவு போட்டு விட்டார். இனி எந்த ரூபத்திலும் கத்தருக்குள் பி.ஜே.யால் நுழையவே முடியாது.

இந்த நிலையில் பி.ஜே. தனது வரட்டுக் கவுரவத்தைக் காக்க எப்படியாவது கத்தருக்கு போய் விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக யூசுப் கர்ளாவி அவர்களிடமே நான் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுகிறேன் என்றும் கூறி இருக்கிறார். 

யாரிடம் மன்னிப்புக் கேட்டாலும் என்னதான் தலை கீழாக நின்றாலும் இனி எந்த ரூபத்திலும் கத்தருக்குள் பி.ஜே.யால் நுழையவே முடியாது. அப்படியொரு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

19-6-2005 அன்று போடப்பட்டுள்ள இந்த தடை எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? என்பதை அறிய முடியாத, அறியத் தெரியாத கத்தர் டி.என்.டி.ஜே.யினர் கத்தரிலுள்ள அப்பாவி தமிழ் முஸ்லிம்கள் மீது அநியாயமாக பழி சுமத்தி திரிகின்றனர். 

உண்மை நிலை இவ்வாறிருக்க மற்ற பகுதியில் உள்ள டி.என்.டி.ஜே.க்கள் பி.ஜே.க்கு உடல்நிலை சரி இல்லாததால் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட செய்தி வந்ததும்  பி.ஜே. இலங்கைக்கே செல்லவில்லை என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்த டி.என்.டி.ஜே.க்கள் கத்தரில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மமதைக்கும் அகம்பாவத்திற்கும் அல்லாஹ் கொடுக்கும் மரண அடிகள் தொடரும்.

யூசுப் கர்ளாவி இடம் மன்னிப்புக் கேட்கத் தயாராகி விட்ட பி.ஜே.க்கு வேண்டுகோளும் எச்சரிக்கையும். பி.ஜே. அவர்களே! உங்களால்; அநியாயமாக இழிவுபடுத்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அனைவருடனும் சமாதானம் ஆக வேண்டும். 

இல்லை என்றால் நான் என்ற உங்கள் மமதைக்கும் அகம்பாவத்திற்கும் அல்லாஹ் கொடுக்கும் மரண அடிகள் தொடரும். கத்தர் தடை சாதராணமானது அல்ல. கத்தர் செல்ல திட்டமிட்டு நீங்கள் செய்த சகல முஸ்தீபுகளையும் முறியடித்தவன் அல்லாஹ். 

அவனை அஞ்சுங்கள். அப்துல் மஜீத் மஹ்ழரியிடம் ரகசியமாக மன்னிப்புக் கேட்டு விட்டு ஹாமித் பக்ரியை கூட்டி வாருங்கள் என்று சொன்ன மாதிரியான இரட்டை வேடங்களெல்லாம் இறவனிடம் எடுபடாது. அல்லாஹ் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் நல்ல புத்திகளை கொடுக்கத் துஆச் செய்கிறோம். வஸ்ஸலாம்.         

வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.