இஸ்லாமிய இஜ்திமா விளம்பரத்தை போட விடாமல் தடுத்த தீய சக்தி எது?

முஸ்லிம் பெண்மணி மாத இதழ் பார்ட்னரும் ஸாஜிதா புக் சென்டர் அதிபருமான ஜக்கரிய்யா அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்கள் பெயரால் ஒரு ஈ-மெயில் பிரசுரம் வந்தது. அது யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சுயமாக அனுப்பி உள்ளீர்கள். எந்த ஒரு தனி மனிதரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்றே ஈ-மெயில் பிரசுரம் வெளியிட்டுள்ளீர்கள். இப்படி அப்பாவியான உங்களைப் பற்றி முன் பின் தெரியாதவர்கள் உங்கள் பின்னணியை அறியாதவர்கள்; புரியாதவர்கள் நம்பலாம்.
கடந்த பாராளு மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஸாஹிபும் தேசிய லீக் தலைவர் அப்துல் லதீப் ஸாஹிபும் அவரவர்கள் கூட்டணியினர் தொகுதி ஒதுக்கியதன் அடிப்படையில் 2 பேருமே மத்திய சென்னையில் போட்டி இடுவதாக அறிவிப்பு வெளியானது. அப்துல் லதீப் ஸாஹிபை எதிர்த்து போட்டி இட வேண்டாம் என மு.லீக் முடிவு செய்து தொகுதியை கூட்டணியிடம் ஒப்படைத்தது.

குறுகிய இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. நான் தோற்றாலும் அப்துல் லதீப் ஜெயிக்கக் கூடாது அதனால்தான் போட்டி இடுகிறேன் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வாயால் சொல்ல வைத்து விட வேண்டும். அதை அப்துல் லதீபை ஆதரித்து பேசும் கூட்டங்களில் போட்டுக் காட்ட வேண்டும். இந்த முடிவுபடி டெலிபோனில் பேசி ரிக்கார்டிங் வேலையை நீங்கள் செய்தீர்கள். எதிர் பார்த்த மாதிரி முஸ்லிம் லீக் தலைவர் வாயிலிருந்து அந்த வார்த்தை வரவில்லை. இருந்தாலும் இப்படி முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஸாஹிப் சொன்னதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

டெலிபோன் ரிக்கார்டிங் வேலையை யாருடைய ஆலோசனையின்படி செய்தீர்கள் என்பதை நீங்கள் ரகசியமாக என்னிடம் கூறியதை ஆதாரமாக கொண்டு குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டால் நீங்களும் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்து மறுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விடுவீர்கள். வில்லங்கமான வேலைகளைச் செய்யுமாறு பிறரை தூண்டி விட்டு சிறிது மாட்டிக் கொண்டதும் முழுமையாகக் காட்டிக் கொடுத்து ஓடி ஒழியும் பெருந்தகைதான் உங்களை முஸ்லிம் லீக் தலைவருடன் டெலிபோன் பேசச் செய்தார். இந்த டெலிபோன் ரிக்கார்டிங் வேலையை நீங்கள் சுயமாக செய்யவில்லை என்பதற்குரிய கேஸட் ஆதாரம் உள்ளது.

எனவே இப்பொழுது வெளியிட்டுள்ள ஈ-மெயில் பிரசுரம் நியாய உணர்வுடன் அல்லாஹுக்காக சுயமாகவே வெளியிட்டுள்ளீர்கள் என்பது உண்மையானால் கீழ் காணும் கேள்விக்கும் விளக்கம் வெளியிடுங்கள்.

14-03-03ல் நடந்த ஷhர்ஜா இஸ்லாமிய இஜ்திமா பற்றிய விளம்பரத்தை முஸ்லிம் பெண்மணியிலும் உணர்வு வார இதழிலும் போட உங்களை அணுகினர். உணர்வில் போட மறுத்து விட்டதுடன் முஸ்லிம் பெண்மணியிலும் போடக் கூடாது என்று கூறியதாக ஷhர்ஜாவுக்கு தெரியப்படுத்தினீர்;கள். மாநாட்டை நடத்தியவர்கள் புதியவர்கள் அல்ல. இதே ஜமாஅத்தின் முந்தைய நிகழ்ச்சிகள் உணர்வில் போடப்பட்டது. ஷஇப்பொழுது போட மறுத்தது ஏன்? காரணம் கேட்டு சம்பந்தப் பட்டவர்கள் எழுதியும் உணர்வு அலுவலகத்தில் இருந்து சரியான பதில் இல்லை.

பேச்சாளர் பட்டியலில் திருச்சி அப்துர் றஹ்மான் பெயர் உள்ளதால் போடவில்லை. இல்லை, மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வரும் பெரம்பலூர் நாஸர் அலி கான் பெயர் உள்ளதால்தான் போடவில்லை. இல்லை இல்லை இவர்கள் பெயர் போடப்பட்ட முந்தைய இஜ்திமா விளம்பரம் உணர்வில் வந்துள்ளது. இக்பால் மதனி பெயர் உள்ளதால்தான் போடவில்லை. இப்படி பல காரணங்கள் உலவி வருகிறது.

எனவே இஸ்லாமிய இஜ்திமா விளம்பரம் போடக் கூடாது என்று தடுத்த தீய சக்தி எது? அதாவது தடுத்த மூலப் பிதா யார்? என்பதும் மறுத்துக் கூறிய காரணம் என்ன என்பதும் உங்களுக்குத்தான் தெரியும். எனவே தெளிவாக அறிவிக்க வேண்டும். கொத்தடிமைக் கூட்டமைப்பு மவுலவிகளுக்கு கட்டுப்பட்டு அவர்களைப் போல் சமாளிப்பு வார்த்தைகளால் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்யாமல் உண்மையை வெளியிட வேண்டும். இப்படிக்கு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக வளைகுடா அமைப்பாளர்
என்று உணர்வு வார இதழ் குறிப்பிட்ட
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.