காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். P.J.

அந்நஜாத் பத்திரிக்கையிலிருந்து ராஜினாமா செய்த பி.ஜே. உண்மைக் காரணத்தை மக்களுக்கு கூறாமல் பொய்யான காரணத்தைக் கூறும்படி அவர் கைப்பட எழுதிய கடிதம் http://mdfazlulilahi.blogspot.com/1990/01/blog-post.html என்ற பிளாக்கில் உள்ளது. அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது. அதற்குரிய ஆதாரம்தான் பி.ஜே. 17-01-1986 இல் துபைக்கு எழுதிய கீழ் காணும் கடிதம்.


இதைப் படித்தால் அந்நஜாத்திலிருந்து ராஜினாமா செய்த பின், ''பத்திரிக்கையை மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன். நில மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன்'' என்று பி.ஜே. சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறெல்லாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பதை விளங்கலாம்.

துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு 17-01-1986 அன்று P. ஜைனுல் ஆபிதீன் எழுதிய கடிதம்.
17-1-86
பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P. ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும். நலம், நலம் பல சூழ்க!

கோவையில் நடந்த ISM மாநாட்டில் நானும் சகோதரர் ஷாஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களும் கலந்து கொண்டோம். நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. பத்திரிக்கை சம்பந்தமாக நீங்கள் எழுதிய மடலை என்னிடம் சகோதரர் ஷாஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்கள் காட்டினார். அது பற்றி நீண்ட நேரம் ஆலோசனை செய்தோம்.

நிர்வாகப் பொறுப்புக்களை ஷாஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களிடம் வழங்கியதை வரவேற்கிறேன். அந்த துறையில் அவர்களின் அனுபவம் அதிகம். அந்த அடிப்படையில், அவரது பொறுப்புக்கள் கீழ்கண்ட விதமாக அமைய வேண்டும் என்ற நான் கருதுகிறேன். சந்தாக்கள் சேர்ப்பது, விலை நிர்ணயம் செய்வது, வினியோகம் செய்வது, அச்சிடும் பொறுப்பு போன்ற காரியங்கள் அவரிடமே இருக்க வேண்டும்.

எனது பொறுப்புக்கள் பின் வருமாறு இருக்க வேண்டும். இதை நாம் தெளிவாகப் பேசிக் கொண்டால் தான் நாளை பிரச்சனைகள் தோன்றாது.

கட்டுரை, கேள்வி, பதில் போன்ற எல்லா எழுத்தோவியங்களும் என் பொறுப்பிலேயே இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தை பிரசுரிப்பது என்றாலும் எனது ஆலோசனைக்கு பின்பே பிரசுரிக்க வேண்டும். யாருடைய கட்டுரையை பிரசுரிப்பது என்றாலும், அது எனது பார்வைக்கு அனுப்பி வைக்கப்ட்டு எனது பரிசீலனைக்குப்பின் தான் பிரசுரிக்க வேண்டும். ஒவ்வொரு மாத இதழையும் நானே முழுமையாகத் தயாரித்துக் கொடுப்பேன். அதற்கு மேல் விளம்பரம் தவிர வேறு எதனையும் சேர்க்கக் கூடாது. அதில் ஏற்படும் எந்த ஒர கருத்துக்கும் நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.


குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக எதனையும் எழுதிடமாட்டேன். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். கிஸ்ஸாக்கள் போன்றவை இடம் பெறாமல் நான் பார்த்துக் கொள்வேன். பத்திரிக்கை நடத்துவதற்கென்று ஒரு சின்ன அலுவலகம் வேண்டும். அது எனது முழு எழுத்துப் பணிக்காக ஒதுக்கித் தரப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10ம் தேதியன்று இதழை தயார் செய்து நிர்வாகியிடம் நான் கொடுக்க வேண்டும். அவர் 30ம் தேதிக்குள் அச்சிட்டு முதல் தேதிக்கு வினியோகிக்க வேண்டும். நான் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தக் கூடாது. 10ம் தேதிக்குள் இதழ் தயாரிப்பது மட்டுமே எனது கடமையாக இருக்க வேண்டும். நான் வெளியூர் சுற்றுப் பயணங்கள் செய்வதும், மற்ற சேவைகளும் என் விருப்பத்தைப் பொருத்தது என்று முடிவு எடுக்க வேண்டும். எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். எனக்குத் துணையாக இன்னொரு மவ்லவியை ஏற்பாடு செய்து கொள்ள அனுமதித்தால் பணி இன்னும் எளிதாக இருக்கும்.


மேற்கூறிய பிரச்சனைகளுக்கு உடனடியாக உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வளவு கறாராக எழுதுகிறேன் என்று எதுவும் எண்ண வேண்டாம். வருங்காலத்தில் பிரச்சனை தோன்றக் கூடாது என்பதற்காகவே முன் கூட்டியே இதனை முடிவு செய்ய விரும்புகிறேன். எனது கடமைக்கும் அதிமாகவே பணியாற்றும் ஆர்வம் எனக்கு உண்டு. சந்தா சேர்ப்பதில் இருந்த எல்லாப் பணிகளிலும் நான் துணை நிற்பேன் என்றாலும், அது என்மீது கட்டாயமாக்கப்படக் கூடாது. தாமதமின்றி உங்கள் பதிலை எதிர் நோக்குகிறேன்.

அண்ணன் எழுதவும் முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியுள்ளனர். நான் மட்டுமே பொறுப்பை ஏற்கிறேன். காரைக்கால் குமர் விஷயமாக 2,000/-உதவி செய்துவிட்டு அதன் அத்தாட்சிகளை அனுப்பினேன். அது கிடைத்ததா? என்பதை எழுதவும். மேலும் 3,000/- என்னிடம் அண்ணன் தந்துள்ளார்கள். வெகுவிரைவில் தகுதியான, குமர்களுக்கு வழங்கிவிட்டு அதன் அத்தாட்சிகளை அனுப்பி வைக்கிறேன்.


நான் மிகவும் விரும்பிக் கொண்டிருந்த பதாவா இப்னு தைமிய்யாவை அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் பல. இரண்டொரு நாளில் இன்ஷாஅல்லாஹ் அது எனக்கு கிடைத்து விடும்.


நமது பத்திரிக்கை அலுவலகத்திற்கென்று ஸிஹாஹ் சித்தாவும், முஸ்னது அஹமதும் தேவை. தப்ஸீர் மனார் இருந்தால் நலம்.


நீங்கள் அனுப்பிக் கொண்டுள்ள ஜெராக்ஸ் காப்பிகளில் பல மிகவும் பயனுள்ளவை. நமது பத்திரிக்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தனியாக சேர்த்து வைத்துள்ளேன்.


அல் அஹாதீதுல் லயீஃபா வல் மவ்ழுவ் என்ற நூலை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பிறபின்
அன்புடன்
P.J.

பி.ஜே.யின் இந்தக் கடிதத்தில் ஹை லைட் செய்யப்பட்டுள்ளவை யாவும் அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது என்பதற்குரிய ஆதாரங்களாகும். சற்று சிந்தித்தால் பிரச்சனைகள் என்ன என்பதும் புரியும். நிர்வாகி என்ற முறையில் அபூஅப்துல்லாஹ் கறாராக இருந்துள்ளார்.

குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக எதனையும் எழுதிடமாட்டேன். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். என்று பி.ஜே. எழுதியுள்ளதிலிருந்து அப்பொழுது பி.ஜே. முழுக்க முழுக்க குர்ஆன் ஹதீஸ் உடையவராக இருக்கவில்லை என்பதை உணரலாம்.

எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். என்றும் எழுதியுள்ளார். பி.ஜே. சம்பளத்திற்குத்தான் அந்நஜாத்தில் சேர்ந்துள்ளார் என்பதற்குரிய ஆதாரமான இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. துபை ஜமாஅத்தில் சம்பளம் பேசித்தான் தவ்ஹீது பணிக்கு பி.ஜே. வந்தார் என்பதற்கும் இது ஆதாரம்.

அது மட்டுமல்ல 'எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை.. என்ற வார்த்தையில் உள்ள அழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கூடுதல் சம்பளம் வேண்டும். அதுதான் உணர்ந்து தருகின்ற ஊதியம் என்பதற்குரிய பொருள். 17-01-1986இல் பி.ஜே. எழுதிய மேலே உள்ள கடிதத்தைப் பார்த்த நீங்கள் 18-01-1986இல் பி.ஜே. எழுதியுள்ளதையும் கீழே தந்துள்ளோம் பாருங்கள்.

துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு மேற்கண்ட கடிதத்தை அனுப்பிய பி.ஜே. ஒரு நாள் இடைவெளி கூட இன்றி மறுநாள். 18-01-1986 அன்று எழுதிய கடிதம்.
18.1.86
பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P.J. யின் அஸ்ஸலாமு அலைக்கும். நலம் நலம் பல சூழ்க.

நீங்கள் அண்ணன் P.S. அவர்களுக்கு H. குத்புத்தீன் சம்பந்தமாக எழுதியது இன்றுதான் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பே அந்த நூல்களுக்காக 1000/- ரூபாய் டூட்டி கட்டி அதனை எடுத்துவிட்டார். SIM அலுவலகத்தில் 1000/- கடன் வாங்கித்தான் H. குத்புத்தீன் அதனை டெலிவரி எடுத்தார். அது தற்போது SIM அலுவலகத்தில் உள்ளது.

அண்ணனின் உடல் நிலை நீங்கள் நினைப்பது போல் இல்லை. அதை எல்லாம் விட பல மடங்கு மோசமான நிலையில் உள்ளது. அதன் விபரம் உங்கள் தம்பியின் கேஸட் மூலம் தெரிந்து கொள்க!

பத்திரிக்கை விஷயம் எனக்கு சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. காரணம், எழுத்து உரிமையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே அபூஅப்துல்லாஹ் அவர்கள் விரும்புகிறார்கள். நானோ, எழுத்து விஷயத்தில் முழு சுதந்திரம் தந்தால் மட்டுமே ஏற்க முடியும் என்று கருதுகிறேன். இருவரின் கொள்கைகள் ஒன்றுதான் எனினும் அணுகுமுறைகளில் எங்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எனவே இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் அபூஅப்துல்லாஹ் அவர்களையே ஆசிரியராகக் கொண்டு நடத்தலாம். அவருக்கு அந்த திறமை உண்டு. தக்லீதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவதும் அவசியமானதுதான்.

நான் ஆசிரியராக இருந்து கொண்டு, எனது எண்ணங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சொல்வதற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்பதுதான் எனது நிலைமை. பினாமி ஆசிரியராக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது. திருச்சியில் 26ஆம் தேதி கூட இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இதனை நான் தெளிவாக சொல்லிவிட எண்ணியுள்ளேன்.

மற்றபடி எங்கள் சேவைகளை எல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்லும்படி எழுதி இருந்தீர்கள். அது எனக்கு விருப்பமில்லை.

எனது திறமை, நேர்மை சேவை மனப்பான்மை, ஆகியவற்றில் பத்திரிக்கை நடத்துவோருக்கு நம்பிக்கை இருந்தால், என் முழுப் பொறுப்பில் எழுத்துத் துறையை தரட்டும். பொருளாதார நிர்வாகத்தை அவர்கள் கவனிக்கட்டும்.

அவ்வாறு இல்லாவிடில் வேறு தகுந்த நபர் ஆசிரியராகட்டும், என்னால் முடிந்த ஒத்துழைப்பு தருகிறேன் (வெளியிலிருந்து கொண்டு), இது நான் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும். என் இறுதி நிலை இதுதான்.
அன்புடன்
P.J.
17ஆம் தேதி எழுதிய கடிதத்தில், 'எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம்' என்று எழுதியுள்ளார். மறுநாள் 18 ஆம் தேதி பத்திரிக்கை விஷயம் எனக்கு சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது என்று எழுதியுள்ளார். அப்படி எழுதியவர் இது நான் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்றும் எழுதியுள்ளார். ஒரு நாள் இடைவெளி கூட இன்றி மறு நாள் மாற்று முடிவை எழுதியவர் தனது முடிவுக்கு வலு சேர்க்க நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்ற பொய்யை எழுதியுள்ளார். இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களிலும் அழுத்தமான பொய்களைக் கூறி தனது தரப்பை நிலை நிறுத்தி வருகிறார். நீண்ட நாள் என்பது பி.ஜே.யின் அகராதியில் 24 மணி நேரத்திற்கு உட்பட்டதோ?


தக்லீதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவதும் அவசியமானதுதான் என்ற எழுத்தின் மூலம் அப்பொழுது பி.ஜே. தக்லீதில் தெளிவில்லாதவராக மத்ஹப்களை விமர்சிக்காதவராகத்தான் இருந்தார் என்பதை அறியலாம். இறுதி நிலை இதுதான் என்று எழுதியவரை எது மாற்றியது என்றால் துபை பணம்தான். துபை ஜமாஅத்தில் சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்தவர்தான் பி.ஜே. மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டமே என்று சுன்னத் ஜமாஅத் மவுலவிகளைப் பார்த்து அன்று கர்ச்சித்தவர் பி.ஜே. இன்று அந்த பி.ஜே.யின் குடும்பமே தவ்ஹீதின் பெயரால் வாழ்ந்து வருகிறது.


பி.ஜே. கைப்பட எழுதிய மேற்கண்ட கடித காப்பிகளை பெற விரும்புபவர்கள் அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்களை தொடர்பு கொள்ளவும். 00919443955333. லுஹாவும் சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்குச் சேர்ந்தவர்தான் என்பதற்கு அவர் துபை ஐ.ஏ.ஸிக்கு எழுதிய 13 பக்க யானைக் காது கடிதம் ஆதாரமாகும். http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html

Comments

Islamic World said…
நீங்க சொல்றது எல்லாம் பொய் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருக்கிறீர்கள். "ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். P.ஜ என்ற தலைப்பை எப்ப வெளியிடீங்கன்னு சொல்ல முடியுமா? நீங்க சொல்ற கருத்தை பீஜே இல்ல நானே தவிடு பொடி ஆக்கி விடுவேன் இன்ஷா அல்லாஹ்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.