Monday, May 25, 2009

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்

மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (15.6.09) தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக ரவுடிகளுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அனைத்து ஆர்ப்பாட் டங்களும் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.


ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மற்றும் ம.ம.க.வினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை புனைந்து வருகின்ற னர். ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத் தில் கலந்து ம.ம.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான சலிமுல்லா கான் உட்பட 100 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியில் ததஜ அலுவலகத்தை தாக்கியதாக 30 பேர் மீதும், சேலத்தில் 20 பேர் மீதும் என ம.ம.க.வினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் அடக்குமுறையைக் கையாள ஆரம்பித்துவிட்டது ஆளுங் கட்சியான தி.மு.க.


தமுமுகவின் ஆரம்ப காலங் களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த் தது இதே திமுகதான்.. ஆயினும் தமுமுக வீறு கொண்டு எழுந்தது. மக்களின் பேரியக்கமாக மாறியது. இப்போது ம.ம.க. மீதான வழக்கு களும், அடக்குமுறைகளும் ம.ம.க. வின் எதிர்கால அரசியல் எழுச்சி யையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
from syed nawfal reply-to tamilmuslimbrothers@googlegroups.com
to tm

1 comments:

Goreshi Mohammed said...

மமகவின் அரசியல் எழுச்சியை காட்டுவதாக எந்த அரசியல் பார்வையாளர்கள் கூறினார்கள் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் மேலும் மானம் காக்க களம் இறங்கியிருக்கும் நம் சகோதர அரசியல்வாதிகள் இதையெல்லாம் எதிர்பார்க்காமலா கோதாவில் குதித்து இருப்பார்கள்? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது அவர்களுக்கு தெரியாததா?