Saturday, August 16, 2008
Tuesday, August 12, 2008
நாம் யார் ?
வளமையான வாழ்விற்காக
இளமைகளை தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற சுனாமியால்
அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் !
சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது
வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில் இருந்து கொண்டே
தொலைபேசியிலே குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய எழுத்துக்கள்!
ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய ஆவல் என்றால்
பணம் பணமறிய ஆவல் என கேட்கும்
ஏ. டி. எம். மெஷின்கள் !
பகட்டான வாழ்க்கை வாழ
பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ. சி. காற்றில் இருந்துக் கொண்டே
மனைவியின் மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே உறங்கும் முன்
தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!
முடியும் வரை உழைத்து விட்டு
முடிந்தவுடன் ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும் இடையில்
பழகிப்போன ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
from Bathusha khanMBA
இளமைகளை தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற சுனாமியால்
அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் !
சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது
வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில் இருந்து கொண்டே
தொலைபேசியிலே குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய எழுத்துக்கள்!
ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய ஆவல் என்றால்
பணம் பணமறிய ஆவல் என கேட்கும்
ஏ. டி. எம். மெஷின்கள் !
பகட்டான வாழ்க்கை வாழ
பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ. சி. காற்றில் இருந்துக் கொண்டே
மனைவியின் மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே உறங்கும் முன்
தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!
முடியும் வரை உழைத்து விட்டு
முடிந்தவுடன் ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும் இடையில்
பழகிப்போன ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
from Bathusha khanMBA
Tuesday, August 05, 2008
உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்.
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
என்.சி.இ.ஆர்.டி.:-
தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
தேசிய திறனாய்வு திட்டம்:-
1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின்
குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
---------- Forwarded message ----------
From: kahid arts
Date: 2008/8/3
Subject: Fw: உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
To: iman news
--- On Sun, 8/3/08, kahid arts wrote:
> From: kahid arts
> Subject: உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
> To: "vkalathur groups"
> Date: Sunday, August 3, 2008, 6:18 PM
> http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=8/2/2008&secid=86
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
என்.சி.இ.ஆர்.டி.:-
தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
தேசிய திறனாய்வு திட்டம்:-
1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின்
குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
---------- Forwarded message ----------
From: kahid arts
Date: 2008/8/3
Subject: Fw: உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
To: iman news
--- On Sun, 8/3/08, kahid arts
> From: kahid arts
> Subject: உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
> To: "vkalathur groups"
> Date: Sunday, August 3, 2008, 6:18 PM
> http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=8/2/2008&secid=86
Monday, August 04, 2008
நாங்கள் அப்பாவிகள்: அப்துல் கபூர்-ஹீரா பேட்டி
நெல்லை: நெல்லையில் டைம் பாம் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹீராவும், அப்துல் கபூரும் நாங்கள் அப்பாவிகள் என கூறியுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2008/08/02/tn-we-are-innocent-says-heera-abdul-gafoor.html
நெல்லையில் டைம்பாம் குண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் கபூரும், ஹீராவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் காத்திருந்த அவர்கள் இருவரும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்துல் கபூர் கூறுகையில், அப்பாவியான என் மீது டைம்பாம் உபகரணங்கள் தயாரித்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். டைம் பாம் குண்டு, எலக்டாரனிக் சர்கியூட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சென்னை ஆலந்தூரில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிர்வாகியாக நான் உள்ளேன். இதை அந்த அமைப்பினர் தற்போது மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் எனக்கும், ஹீராவுக்கும் பழக்கம் உண்டு.
சென்னையில் நான் பணியாற்றிய செருப்பு கடைக்கு அவர் அடிக்கடி வருவார். இரு அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக நான் செயல்பட்டதாக கருதி சிலர் தூண்டுதலின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லா எனக்கு துணையாக உள்ளார். வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன் என்றார்.
ஹூரா கூறும்போது, நான் தேசப்பற்று மிகுந்தவன். சென்னையில் பெயிண்டராக இருந்தேன். துவக்கத்தில் இறைவன் ஒருவனே என்ற இயக்கத்தில் இருந்தேன். தற்போது அந்த இயக்கத்தில் இல்லை. இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலனை கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயிலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜமீனில் வெளியே வந்தேன். அதற்குள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
நான் தீவிரவாதி கிடையாது. வெடிகுண்டு சதி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பூனையாக இருந்த என்னை புலியாக சித்தரிக்கின்றனர். என்னை தீவிரவாதியாக கருதி தனிமை சிறையில் அடைத்தது வேதனை அளிக்கின்றது.
சிறையில் இருந்தபோது அலி அப்துல்லாவிடம் பழக்கம் உண்டு. அடுத்த மாதம் என் தங்கையின் திருமணம் நடக்கிறது. நான் பொதுப் பணிகளில் ஆர்வம் உள்ளவன். இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை இந்து மக்களுக்கும் ரத்த தானம் செய்துள்ளேன் என்றார் அவர்.
10 நாள் போலீஸ் காவல்:
இதற்கிடையே சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்குக் கொண்டு வரப்பட்ட அலி அப்துல்லாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அப்துல் கபூர், அலி அப்துல்லா, ஹீரா ஆகியோரை போலீஸ் காவலில் அனுமதிக்க கோரி போலீஸ் தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்துச் சென்று விசாரிக்க அனுமதி அளித்தார்.
வரும் 11ம் தேதி மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை மூவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் அவர்களுடைய வக்கீல்களுடன் பேச அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு வெளியூருக்கு அழைத்து செல்லக் கூடாது என மஜீஸ்திரேட் போலீசாருக்கு நிபந்தனை விதித்தார்.
http://thatstamil.oneindia.in/news/2008/08/02/tn-we-are-innocent-says-heera-abdul-gafoor.html
நெல்லையில் டைம்பாம் குண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் கபூரும், ஹீராவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் காத்திருந்த அவர்கள் இருவரும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்துல் கபூர் கூறுகையில், அப்பாவியான என் மீது டைம்பாம் உபகரணங்கள் தயாரித்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். டைம் பாம் குண்டு, எலக்டாரனிக் சர்கியூட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சென்னை ஆலந்தூரில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிர்வாகியாக நான் உள்ளேன். இதை அந்த அமைப்பினர் தற்போது மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் எனக்கும், ஹீராவுக்கும் பழக்கம் உண்டு.
சென்னையில் நான் பணியாற்றிய செருப்பு கடைக்கு அவர் அடிக்கடி வருவார். இரு அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக நான் செயல்பட்டதாக கருதி சிலர் தூண்டுதலின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லா எனக்கு துணையாக உள்ளார். வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன் என்றார்.
ஹூரா கூறும்போது, நான் தேசப்பற்று மிகுந்தவன். சென்னையில் பெயிண்டராக இருந்தேன். துவக்கத்தில் இறைவன் ஒருவனே என்ற இயக்கத்தில் இருந்தேன். தற்போது அந்த இயக்கத்தில் இல்லை. இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலனை கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயிலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜமீனில் வெளியே வந்தேன். அதற்குள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
நான் தீவிரவாதி கிடையாது. வெடிகுண்டு சதி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பூனையாக இருந்த என்னை புலியாக சித்தரிக்கின்றனர். என்னை தீவிரவாதியாக கருதி தனிமை சிறையில் அடைத்தது வேதனை அளிக்கின்றது.
சிறையில் இருந்தபோது அலி அப்துல்லாவிடம் பழக்கம் உண்டு. அடுத்த மாதம் என் தங்கையின் திருமணம் நடக்கிறது. நான் பொதுப் பணிகளில் ஆர்வம் உள்ளவன். இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை இந்து மக்களுக்கும் ரத்த தானம் செய்துள்ளேன் என்றார் அவர்.
10 நாள் போலீஸ் காவல்:
இதற்கிடையே சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்குக் கொண்டு வரப்பட்ட அலி அப்துல்லாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அப்துல் கபூர், அலி அப்துல்லா, ஹீரா ஆகியோரை போலீஸ் காவலில் அனுமதிக்க கோரி போலீஸ் தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்துச் சென்று விசாரிக்க அனுமதி அளித்தார்.
வரும் 11ம் தேதி மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை மூவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் அவர்களுடைய வக்கீல்களுடன் பேச அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு வெளியூருக்கு அழைத்து செல்லக் கூடாது என மஜீஸ்திரேட் போலீசாருக்கு நிபந்தனை விதித்தார்.
Saturday, August 02, 2008
சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.
தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. 'இளமையில் கல்' என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.
"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.
தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.
(http://tamilmurasu.tamil.sg/node/626)
பிறைநதிபுரத்தான்
http://mdfazlulilahi.blogspot.com/2008/06/blog-post_11.html
தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு
சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான
www.tmmkonline.org
www.tmmk.in
இயங்கவில்லை.
ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்
www.tmmk.info
www.tmmkonline.net
www.tmmkonline.com
சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான
www.tmmkonline.org
www.tmmk.in
இயங்கவில்லை.
ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்
www.tmmk.info
www.tmmkonline.net
www.tmmkonline.com
Subscribe to:
Posts (Atom)